October 2018 - 1 Tech Tamil

Sunday 7 October 2018

ATM Card வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

October 07, 2018 0


நம்மிடம் பணம் இருந்தால் பத்திரமாக இருக்காது அல்லது திருடுபோய் விடும் என பயந்துதான் பேங்கில் பணம் போடா ஆரமித்தோம். ஆனால் இன்று இருக்கிறதுலேயே பேங்க் காரன்தான் மிக வேகமாகவும், அதிகமாகவும் திருடுகிறான். பாங்கில் உள்ள பணத்தை நாம் நினைத்த நேரத்தில் எடுக்கமுடியாது. அதனால் ATM Card கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு 6 முறை பயப்படுதினால், அதற்கும் பணம் பிடிக்கப்படுகிறது.


சமீபகாலமாக இணையதள உலகில் பணம் அதிகமாக திருடப்படுகிறது. அதனை தடுக்கும் வகையில் ரிசர்வ் பேங்க் ATM கார்டில் சிப் ஒன்றை பொறுத்த வங்கிகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி புதிதாக வரும் அணைத்து ATM கார்டுமே EMV சிப் பொறுத்தப்பட்டுதான் வருகிறது. ஆனால் பழைய வாடிக்கையாளர்கள் ATM கார்டில் அந்த சிப் இல்லாததால், வருகிற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மாற்ற வேண்டும், இல்லைஎன்றால் ATM Card முற்றிலுமாக முடக்கப்படும் என ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது.

அதனால் அணைத்து வாங்கி வாடிக்கையாளர்களும் தங்களது ATM கார்டை அவர்களின் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் ATM கார்டு முடக்கப்படும்.
Read More

தமிழகத்தில் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது... பகீர் கிளப்பும் துரைமுருகன்!

October 07, 2018 0
திமுகவினர் எடுத்துக்கொடுத்த இறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறது என திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்ட பின் திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.


அப்போது இறந்தவர்களின் பெயரால் ஓட்டு விழுவதற்கு யாரோ பின்புலமாக இருக்கிறார்கள் என்பதே அர்த்தம் என்று கூறியுள்ளார். பட்டியலை தயாரிக்கும் அதிகாரிகள் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார். திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்காததில் சந்தேகம் நிலவி வருகிறது


மேலும் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க திமுக தயார், நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை அதிமுக ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார். துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என்று ஆளுநர் தாமதமாக சொல்வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் இப்போது வாய் திறந்ததில் ஏதோ சூட்சமம் உள்ளது. மாநில ஆளுநர் சொல்லி இருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஏதோ ஒன்று நடக்கிறது. அது விரைவில் வெளி வரும் என்றார்.


Read More